Posts

தேவரடியார் எழுப்பிய கோவில்

Image
 தேவரடியார் எழுப்பிய கோவில்: திருநலக்குன்றம் என அன்று அழைக்கப்பட்ட இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில்,அந்த ஊரைச்சேர்ந்த தேவரடியாரான துக்கையாண்டர் மகள் நாச்சி என்பவர்,ஒரு அம்மன் கோவில் பிற்கால பாண்டியரான வீரபாண்டியன் ஆட்சி காலத்தில் கட்டியுள்ளார். அம்மன் பெயர் திருக்காமக்கோட்டத்து நாச்சியார் என கல்வெட்டில் குறிக்கப்படுகிறார். இந்த அம்மன்,மேற்றளி என அன்று கல்வெட்டில் அழைக்கப்பட்ட குடைவரைகோவில் ஈசனின் இணையராக கல்வெட்டு குறிப்பிடுகிறது.

ஹொய்சாளர் கால பள்ளிவாசல்

Image
  ஹொய்சாளர் கால பள்ளிவாசல்: திருச்சியின் பிரசித்தி பெற்ற சமயபுரத்தின் அருகே வெங்ககுடி எனும் ஊர் அமைந்துள்ளது. பதிநன்கு-பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த மசூதி இது. கல்வெட்டில் இவ்வூர் விக்ரமபுரம் என அழைக்கப்பட்டுள்ளது. பெரிய வளாகத்துடன், மசூதியின் முன்பு சத்திரத்துடனும் அமைந்துள்ளது. மசூதியின் உள்ளே பராமரிப்பின்றி நிறைய சமாதிகள், கல்கட்டுமானங்கள் கேட்பாரின்றி பாழ்பட்டு கிடக்கிறது. ஹொய்சாளர் வருகை: சுந்தரபாண்டியனின் எழுச்சிக்குப்பின் சோழனான மூன்றாம் ராஜராஜனிற்கு உதவியாய் அவரது உறவினரான ஹொய்சாளர் வீரநரசிம்மர் வருகிறார். இவர் கண்ணணூரை தலைநகராய் கொண்டு ஆட்சிபுரிகிறார். இவருக்குப்பின் சிலகாலம் திருச்சிராப்பள்ளியின் பெரும்பகுதி ஹொய்சார் ஆளுகையில் இருந்தது.  ஹொய்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர் வீரசோமேஸ்வரர் . இவர் பெயரிலேயே இன்று திருச்சியிலுள்ள சோமரசன்பேட்டை அமைந்துள்ளது! அதன்பின் ஹொய்சாளரை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கின்றனர் முஸ்லீம்கள். அப்போது கட்டப்பட்ட மசூதியே இது. இப்பகுதியில் ஹொய்சாளர்-மும்மதியர் கடும்போர் மூண்டதற்கு அடையாளமாய் கண்ணனூர் போசளீஸ்வரர் கோவிலும், அங்குள்ள நடுகல்லும் சாட்சி...

முத்தரையர் குடைவரை:

Image
  முத்தரையர் குடைவரை: புதுக்கோட்டை -பொன்னமராவதி சாலையில் உள்ள வையாபுரி என்ற ஊரினை தாண்டி சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊர் பூவாலைக்குடி, இங்குள்ள ஏரியினை கடந்துதான் இக்கோவிலுக்கு செல்ல வேண்டும், இருசக்கர வாகனங்களில் செல்வது உகந்தது.  முறையான பாதையில்லை. மழைகாலத்தில் செல்வது சிரமம்தான். காரையூர் விளக்கு வழியாகவும் இவ்வூரினை அடையலாம். கோவிலின் அமைப்பு: இக்குடைவரை கருவறை, கருவறை முன்சுவர், முகமண்டபம், பெருமண்டபம், முன்பண்டபம் என்ற கூராய் கட்டப்பட்டுள்ளது.  பெருமண்டபத்தில் அம்மன்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் குடைவரைக்கு வெளியே உள்ள அம்மன் சுந்தரவல்லி என அழைக்கப்படுகிறார். மேலும், பைரவர், சண்டேசர், ஆறுமுகருக்கு தனித்தனியாய்  சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. குடைவரை அமைப்பு: லிங்கம் தாய்ப்பாறையில் குடையப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள அனைத்து குடைவரையிலும் லிங்கத்திருமேனிகள் தாய்ப்பாறையில் அமைந்தது இம்மாவட்டத்திற்கு உள்ள சிறப்பு. பெரும்பாலும் பாண்டியர் குடைவரைகள் அனைத்துமே தாய்ப்பாறை லிங்கங்களே. இக்கோவிலின் கருவறை வாயிலின் இடப்புறம் நீர் வெளியேறும் வண்ணம் வெட்டப்பட்...

பல்லவர் கற்றளி:

Image
  பல்லவர் கற்றளி: இன்று திருப்பட்டூர் என அழைக்கப்படும் திருபிடவூரில், இராஜசிம்மனால் காஞ்சியில் தோற்றுவிக்கப்பட்ட கைலாசநாதர்கோவில் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது ஒரு கோவில். பல்லவர்கால கல்வெட்டுகள் இங்கு கிடைக்காவிடினும், இக்கோவிலின் தோற்றம் காஞ்சி பெரியகோவிலை நகலெடுத்தவண்ணம் உள்ளதால், இக்கோவில் இராஜசிம்மன் காலத்தில் உருவாகிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இங்குள்ள லிங்கம் பதினாறு பட்டையுடைய "தாராலிங்கம்" ஆகும். இது பல்லவர் காலத்தைய சிறப்புவாய்ந்த லிங்கம் ஆகும். மேலும் கருவறையின் பின்புறம் "சோமாஸ்கந்தர்" உருவம் அமைக்கப்பட்டு பின் அழிந்துபட்ட சுவடும் உள்ளது. கருவறையில் சோமாஸ்கந்தர் உருவம் வழக்கம் இருந்நை தொண்டைமண்டல பல்லவர்கால கோவில்களில் காணலாம். இக்கோவிலின் வெளியேயுள்ள நந்தி பல்லவர்கால நந்தியாகும். இக்கோவிலில் மேலும் சிறப்பாக கருவறையைச் சுற்றி ஒரு திருச்சுற்று அறை உள்ளது. இதை "சாந்தார அறை" என்றும் அழைப்பார்கள். இவ்வகை சாந்தாரஅறை கட்டுமானம் தமிழகத்தில் வெகுசில கோவில்களில் மட்டுமே காணப்படும் ஒரு சிறப்பம்சமாகும். கோஷ்ட சிற்பங்கள் பிற்காலத்தைய புணரமைப்பில் தம்...

சோழமாதேவி

Image
சோழமாதேவி : திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுக்காவில் உள்ளது இவ்வூர். இருபது வருடம் முன்பு பாழ்பட்டு இருந்த கோவில், உள்ளூர் கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் முயற்சியால் பலமுறை அரசிற்கு மணு கொடுக்கப்பட்டு, இக்கோவிலின் கல்வெட்டு சிறப்பு கருதி மீட்கப்பட்டது. Raman Sthapathy Trichy ஐயா அவர்களால் பணிசெய்யப்பட்டு புத்துயிர் பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. ராஜராஜசோழனின் மனைவியின் பெயர் சோழமாதேவி, அவர் பெயரில் இவ்வூர் அன்று முதல் இன்றுவரை அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வூரிலிருந்து தஞ்சைபெரியகோவில் மெய்க்காவலுக்கு நால்வர் அன்று சென்றுள்ளனர். இக்கோவிலில் உள்ள வீரராஜேந்திரனின் கல்வெட்டு ஆதிசங்கரின் பகவத் பாதீயம் எனும் சாரீர பாஷ்யத்திற்கு உரை எழுதிய சதானந்த பிடாரர் என்பவர் தினமும் இக்கோவிலில் அந்த உரையை சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அவரின் கல்விப்பணிக்காக நிறைய கொடைகள் வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு செய்தியை கேள்விப்பட்டு காஞ்சி மட சங்கராச்சாரியர் இத்தல இறைவனை தரிசித்து சென்றுள்ளார். அவரை ஊரார் வெகுவிமரிசையாக வரவேற்றுள்ளனர். இக்கோவில் 993ல் கட்டப்பட்டதை கல்வெட்டு தெரிவி...